
சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி முரசு நாளிதழின் 17ம் ஆண்டு விழாவில் பங்கு பெற்றேன். நிகழ்ச்சியில் மூத்த பத்திரிக்கையாளர்T.S.S.மணி தலைமை ஏற்க, மாண்புமிகு மேனாள் நீதியரசர்
அக்பர் அலி சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். பெருந்தலைவர் காமராஜர் பேத்தி கமலிகா காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் எனக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார் மாண்புமிகு நீதியரசர்.
இதன் ஆசிரியர் தம்பி ரிச்சர்ட் ஆனந்த் 18 ஆண்டு கால நட்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
_மூத்த பத்திரிகையாளர் விடாரண்யம்





