- பொது

ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் தொடங்கிய ‘பேக் ஆன் டிராக்’ திட்டம்!

ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் தொடங்கியுள்ள ‘பேக் ஆன் டிராக்’ திட்டத்திற்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 3500-க்கும் அதிகமான இந்திய விளையாட்டு வீரர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது

தமிழ்நாட்டைச் சேர்ந்த 1500-க்கும் அதிகமான பயனாளிகள் கணிசமான அளவு உதவி பெற்றுள்ளனர்

சென்னை, ஜூன் 21, 2021: Dream Sports நிறுவனத்தின் அறக்கொடை அமைப்பான Dream Sports Foundation (DSF), இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தனது Back on Track திட்டத்தின் மூலமாக, 29 வகை விளையாட்டுக்களைச் சேர்ந்த 3500-க்கும் அதிகமான தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகரமாக ஆதரவு அளித்துள்ளது. இந்த 3500 பயனாளிகளில் 3300 பேர் தற்போது விளையாட்டுக் களத்தில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற தடகள வீரர்கள் ஆவர். மேலும், 100-க்கும் அதிகமான கோச்கள், 70-க்கும் அதிகமான விளையாட்டுக் களப் பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் பயனடைந்துள்ளனர். இந்தப் பயனாளிகள் அனைவரும் இந்தியாவில் உள்ள 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 1500-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் உதவி கிடைத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து பல நிலைகளில் வாழ்க்கை சீர்குலைந்து, விளையாட்டு உள்பட, தொழில்துறைகளிலும், இதர பிரிவுகளிலும் வேலை மற்றும் வருமான இழப்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில், 2020 ஆகஸ்ட் தேசிய விளையாட்டு தினத்தன்று தொடங்கப்பட்ட ‘பேக் ஆன் டிராக்’ திட்டம் மூலம், விளையாட்டுத் துறையில் தேவையாக இருப்பவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி வசதிகள், விளையாட்டு சாதனங்கள், கோச்சிங், சரியான உணவு, மற்றும் ஊட்டச்சத்து, மாதாந்திர ஸ்டைபண்டு, சுகாதார கிட்கள் என்பன போன்ற உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உதவி சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில், நவ் சஹயோக் ஃபவுண்டேஷன், டிரிபிள் அகாடமி,, நாகாலாந்து ஃபுட்பால் ஃபவுண்டேஷன், தி ரைட் பிட்ச், தி பால் புரொஜெக்ட் ஆகியன உள்ளிட்ட நாடெங்கும் உள்ள 16 என் ஜி ஓ-க்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலினால் வேலைகளை இழந்துவிட்ட விளையாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கும் (DSF) தனது பிளேஃபீல்டு மேகஸின் திட்டம் மூலம் உதவி செய்துள்ளது.
இந்தத் திட்டம் பற்றிப் பேசிய ட்ரீம் ஸ்போர்ட்ஸ் & ட்ரீம் 11 நிறுவனத்தை இணைந்து தோற்றுவித்தவரும், சிஓஓ-வும் ஆன பவித் சேத், “கொரோனா பெருந்தொற்றினால் வாய்ப்பும், நிதி ஆதாரங்களும் இல்லாமல் போய், பல தொழில்முறை விளையாட்டு வீரர்கள் வாழ வழியில்லாமல், தங்களது கனவை கைவிட்டனர். அவர்கள் மீண்டும் களத்திற்கு வந்து, தங்களது சொந்த மற்றும் விளையாட்டு லட்சியங்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக ‘பேக் ஆன் டிராக்’ திட்டத்தின் மூலம் உதவி செய்ய நாங்கள் விரும்பினோம். இதன் மூலமாக இந்தியா முழுவதும் பல விளையாட்டு வீரர்களைச் சென்றடைந்து, கடைசி 9 மாதங்களில் ஒருங்கிணைந்த விளையாட்டு வசதிகளைச் செய்து தர முடிந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது,” என்றுகூறினார்.

‘பேக் ஆன் ட்ராக்’ இன் பயனீட்டாளர்களின் ஒன்றான நவ்சஹ்யோக் ஃபவுண்டேஷன் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் கடினமான பிண்ணணியுடைய இளம் குழந்தைகளுக்கு முக்கியமான வாழ்க்கைத் திறன் மற்றும் படைப்புத் திறனை வளர்க்கும் நிறுவனமாகும். அவர்கள் இதனை ஆய்வு முறையிலான கற்றல் மற்றும் கோ-கோ, கபடி, நீளத் தாண்டுதல், உயரத் தாண்டுதல் போன்ற விளையாட்டுகளின் மூலம் செயல்படுத்தி வருகின்றனர். நவ்யோக் ஃபவுண்டேஷனின் துணை நிறுவனர், திரு. பரிதோஷ் சேகல், “இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளில் கிட்டத்தட்ட 70% குழந்தைகள் கிராமங்களில் இருக்கின்றனர். வளப் பற்றாக்குறை, போதுமான வழிகாட்டுதல் மற்றும் பெற்றோர்களின் கவனிப்பு ஆகியவை இல்லாததால் அவர்கள் விரைவில் பள்ளி செல்வதை விட்டு விடுகிறார்கள். மேலும், வாழ்க்கைத் திறன் குறைபாட்டினால் அவர்களில் பெரும்பாலோனோர் வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்க தயாராகுவதில்லை. நாங்கள் இந்த நோய்த்தொற்று காலத்தில், உதவியாக இருந்த DSF இன் ‘பேக் ஆன் ட்ராக்’ போன்ற நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அவர்கள் குறிப்பாக இந்த நோய்த்தொற்றுக் காலத்தில், சோதனையான சூழ்நிலைகளை அனுபவித்து வரும் குழந்தைகளுக்கு நிதியுதவி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றுடன், விளையாடுவதற்கான வாய்ப்பளித்து அவர்கள் விளையாட்டு வீரர்களாகி, தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் ஆற்றலுடைய இளைஞர்களாக வளர்வதற்கான ஆதரவளித்து வருகின்றனர்.”

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக நாட்டுடன் இணைந்து 2021 ஏப்ரலில் போராடத் தொடங்கிய DSF, கிவ் இந்தியா மற்றும் ஆக்ட் மானியங்கள் மூலமாக இந்தியா முழுவதும் உடனடி மருத்துவ உதவிகளை வழங்கி, விளையாட்டு சாதனங்களையும், மருத்துவமனைகளுக்குப் படுக்கைகளையும், தடுப்பூசி இயக்கத்திற்கு உதவிகளையும் வழங்கியிருக்கிறது. மேலும், இந்தியாவில் தனது கோவிட்-19 நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாகப் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் கெட்டோ என்னும் முயற்சியின் மூலமாக, ஏற்கனவே ரூ.1.25 கோடி பணத்தை DSF திரட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களுக்கு சமைத்த உணவுகளையும், உணவுப் பொருட்களையும் வழங்கியிருக்கிறது, மேலும், மகாராஷ்டிர அரசு மற்றும் பிஎம்சி (பிருஹன் மும்பை முனிசிபல் மாநகராட்சி) யைச் சேர்ந்த முன்களப் பணியாளர்களுக்கு சுகாதார கிட்களையும், காப்பு உடைகளையும் ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் வழங்கியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக பிஎம் கேர்ஸ் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காகவும் DSF நிதி வழங்கியுள்ளது.

ட்ரீம் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ‘பேக் ஆன் ட்ராக்’ திட்டம் பற்றி மேலும் அறிய பார்வையிடுங்கள்: https://www.dsf.org.in/

***

About expressuser

Read All Posts By expressuser