
இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களின் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உலக நாயகன் பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை புரிந்து திறந்து வைத்தார். பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகம், அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது.





