- பொது

டிக்கெட் பரிசோதகர் எஸ் நந்தகுமாருக்கு விருது

இந்தியாவில் முதல் பயனாளிகள் ரெயில் இயக்கியதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது. அப்போது ஒவ்வொரு ஆண்டும் இரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டும் வகையில் அதி விசிஷ்ட்ட இரயில்வே சேவ புரஸ் கார் எனும் விருந்து வழங்கப்படும்.

இந்நிலையில் 69 வது இரயில்வே வார விழா நிகழ்ச்சி இன்று 21 ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரயில்வே மந்திரி கலந்து கொண்டு இந்த ஆண்டு சிறந்து விளங்கிய பணியாளர்களுக்கு விருந்து வழங்கி கவுரவித்தார்.
இரயில்வே வாரிய 2025 விருதுக்கு தெற்கு ரயில்வேயில் இருந்து 8 ஊழியர்கள் தேர்வாகி உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
அதி விஷிஷ்ட் இரயில்வே சேவ புரஸ்கார் எனும் விருது பெறுவதற்கு தெற்கு ரயில்வேயில் இருந்து 8 ஊழியர்கள் தேர்வாகி உள்ளனர். அவர்களில் ஒருவர் சென்னை கோட்ட டிக்கெட் பரிசோதகர் எஸ் நந்தகுமார் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

About expressuser

Read All Posts By expressuser