
“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!
AK Film Factory சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி திரில்லர் திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் மேலும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் ஒன்றையும் பரிசளித்து அசத்தினார்.
விழாவில் படத்தின் வெற்றி, ரசிகர்களின் வரவேற்பு மற்றும் படக்குழுவினரின் அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன. படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்காக ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,
“இம்மார்டல்” திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள படம். சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படக்குழு ஆரம்பம் முதலே கவனமாக இருந்தது. அந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் ஜிவி பிரகாஷுக்கு எனது நன்றி. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜிவி பிரகாஷ் அளித்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று படத்தை புரமோட் செய்தோம்.
மேலும், படத்தை தமிழகத்தில் வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கு நன்றி. “படத்தை பெரிதாக வெளியிட வேண்டும்” என்ற தனது கோரிக்கையை ஏற்று ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டதுடன், படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் திரையிடல் அதிகரிக்கப்பட்டது பெரிய மகிழ்ச்சி.
“இம்மார்டல்” படத்தை வெற்றிப் படமாக கொண்டு வந்த தனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பேசியதாவது..,
ஜீவி பிரகாஷ் அவர்களுக்கு முதல் நன்றி. மேலும், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சக்தி சார், சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் இந்த வெற்றியை மக்களிடம் கொண்டு சென்ற அனைத்து ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. “இந்த வெற்றியில் மீடியா நண்பர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி”.
எடிட்டர் ராஜேஷ் பேசியதாவது..,
“இம்மார்டல்” படத்தின் வெற்றிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளியான பிறகு பல இயக்குநர்கள் என்னைத் தொடர்புகொண்டு வாழ்த்தினார்கள், அவர்களின் பாராட்டுகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
படத்தின் எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், படக்குழுவினர் மற்றும் குறிப்பாக இயக்குநர் மாரியப்பன் சின்னா ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றி. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.





